19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் டுபாயில் ஆரம்பமாகின்ற நிலையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை (8) ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.
இப்போட்டிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் தலா இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 15ஆம் திகதி நடைபெறுகின்றன.
50 ஓவர் வடிவில் நடைபெறும் இந்த தொடரில் ‘ஏ’ பிரில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.
தொடர்ந்து 10 ஆம் திகதி பாகிஸ்தானுடனும், 12ஆம் திகதி நேபாளத்துடன் விளையாடுகிறது இந்திய அணி. இறுதிப் போட்டி 17ஆம் திகதி டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
லீக் ஆட்டங்கள் அனைத்தும் ICC அகாடமி மைதானங்களில் நடைபெறவுள்ளன.