அநுராதபுரம் மாவட்ட திறப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஏறுவெவ நீர்தேக்க பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக நேற்று முன்தினம் (22) ஐந்து வான் கதவுகளை திறக்க நேரிட்டதாக நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏறுவெவ குளத்தில் ஏழு வான் கதவுகள் உள்ள நிலையில் இதில் மூன்று கதவுகள் 02 அடி உயரத்துக்கும், 02 வான் கதவுகள் 01 அடி உயரத்துக்கும் திறக்கப்பட்டன. இதன் ஊடாக வினாடிக்கு 400 கன அடி நீர் மக கனந்தாரவ மற்றும் நாச்சாதுவ நீர் தேக்கங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இவ்வாறு குளத்தின் வான் கதவுகள் ஊடாக வெளியேறும் நீர் செய்கை பண்ணப்பட்டுள்ள வயல் நிலங்கள் ஊடாக பாய்வதால் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று (23 ) 03 கதவுகள் மட்டும் திறந்து விட நீர்ப்பாசன அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டனர்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் அதிக மழை பெய்தால், மானங்கட்டிய ஏரியின் நீர் கொள்ளளவு அதிகரிக்கும் என்பதால், ஏறுவெவயின் வான் கதவுகளை மேலும் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
திறப்பனை பிரதேசத்தில் அடைமழை;
ஐந்து வான்கதவுகளும் திறப்பு திறப்பனை தினகரன் நிருபர்
225