கண்டி பிரதான வீதியில் திருடர் துணிகரம்
வவுனியா நகரில், கண்டி வீதியிலமைந்துள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகம் முன்பாகவுள்ள 07 கடைகளில், ஒரே இரவில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (21) இரவு இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கண்டி வீதியில் உள்ள கடைகளின் கதவுகளை உடைத்து நுழைந்த திருடர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கடை உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.இம் முறைப்பாட்டையடுத்து சிசிடிவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
07 கடைகளில் இடம்பெற்ற இத்திருட்டில், 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.