292
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் 10 பண்ணைகளில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு பயன்படுத்தப்படாத காணிகளில் வைத்து வெட்டப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்தி முனையில் பணம், நகைகள் என்பனவும் கொள்ளையிடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவுவேளைகளில் மட்டுமின்றி பகல் வேளைகளிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
(கிளிநொச்சி குறூப் நிருபர்)