நாடளாவிய ரீதியில் திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இக்கலந்துரையாடலில் தற்போது 06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படுவதில்லை என்றும் 03 முதல் 05 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே திரிபோஷ வழங்கப்படுவதாகவும் இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்கப்படாமை தொடர்பில் நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வயதினருக்கான திரிபோஷ உற்பத்தியில் உரிய அளவுகோல்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாலேயே, திரிபோஷ தயாரிக்கப்படவில்லையென அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுகாதார அமைச்சினால் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்ட பின்னர், அந்த வயதினருக்கும் திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், விநியோகிக்கப்படும் திரிபோஷா, கஷ்டப் பிரதேசங்களிலுள்ள தேவையுடைய மக்களுக்கு சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.இதற்கமைய, போஷாக்குத் தேவையுடைய பிள்ளைகளை உரிய முறையில் இனங்கண்டு, தேவையுடைய பிள்ளைகளுக்கு திரிபோஷா விநியோகிக்கப்படுவது தொடர்பில் மேற்பார்வை செய்யப்பட வேண்டுமெனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.