கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி, நாடு திரும்பிக்கொண்டிருந்த பெண் நேற்று (23) விமானத்துக்குள் உயிரிழந்தார். தனது சேவைக் காலத்தை முடித்துவிட்டு மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, இப்பெண் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மொரட்டுவை பிரதேசத்தின் கோரலவெல்லை பகுதியைச் சேர்ந்த, குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய திருமணமாகாத பெண்ணாவார். இவர்,நேற்று காலை 01.17 மணியளவில் கட்டாரின் டோஹாவிேலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த நிலையில்,மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.