204
இராகலை புனித ஜெபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அருட்தந்தையர்கள் டொமினிக் சந்தனம், லெனார்ட் விஜயவர்தன ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். செபமாலை மாதாவின் திருச்சுரூப பவனி இராகலை நகர் ஊடாக ஆலயத்தை வந்தடைந்ததுடன் பெருந்திரளான விசுவாசிகள் திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: ஆ ரமேஷ்)