திருமணத்திற்கு சென்ற பஸ் விபத்து; ஒருவர் பலி

- 8 பெண்கள் உட்பட 10 பேர் காயம்
- போதையில் இருந்த சாரதி கைது

மொரகஹஹேனவில் இருந்து பிடிபனை நோக்கி திருமண வைபவத்தில் பங்குபற்றுவதற்காக நபர்களை ஏற்றிய பஸ் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (22) மாலை  இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் 14 - 52 வயதிற்கு இடைப்பட்ட 8 பெண்களும் 3 ஆண்களும் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


Add new comment

Or log in with...