கட்டுத்துப்பாக்கி கட்டிய மூவர் சுற்றிவளைப்புகளில் கைது

கஹட்டகஸ்திகிலிய வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட ரத்மல நாம்பாகட ஆகிய வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் மூலம் கட்டுத்துப்பாக்கி கட்டிய கொஹம்பகஸ்வெவ, உபுல்தெனிய மற்றும் கஹட்டகஸ்திகிலிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதுடன் கட்டுத்துவக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தனிப்பட்ட அங்கிகாரத்துடன் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் வனஜீவராசிகள் அலுவலத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக பொறுப்பதிகாரி அருண திஸாநாயக்க வனவிலங்கு கட்டுப்பாட்டாளர் கருணாரத்ன, சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களான பியரத்ன, அரும்பொல வனஜீவராசிகள் பல்துறை உறுப்பினர் ரூபசிங்க உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்தர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...