சீனக் கப்பல் Yuan Wang 5 அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேறியது

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 (யுவான் வாங் 5) இன்று (22) பிற்பகல் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த குறித்த கப்பலுக்கு இன்று (22) வரை குறித்த துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதற்கான அனுமதியை இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியிருந்தது.

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறும் நோக்கில் 'யுவான் வாங் 5' கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.


Add new comment

Or log in with...