ஜூலை 17 ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், கொழும்பு வர்த்தக நகர பகுதி (CC) மற்றும் கைத்தொழில் முதலீட்டு வர்த்தக வலயங்கள் (BOI) தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மு.ப. 10.20 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,ஜூலை 17: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 - பி.ப. 1.00 - பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 - பி.ப. 6.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை ஜூலை 17.pdf>> 
 <<பிரதேசங்கள்.pdf>>
(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)


Add new comment

Or log in with...