Wednesday, July 13, 2022 - 4:12pm
'1990' சுகப்படுத்தும் ('சுவசெரிய') அம்பியூலன்ஸ் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து தங்களது சேவைகளை வழக்கம் போல் 13-20 நிமிடங்களுக்குள் அணுகுதல் மற்றும் சில பிரதேசங்களில் முற்றாக நடைமுறைப்படுத்த தற்காலிகமாக முடியாமல் போயுள்ளதாக, கடந்த ஜூலை 03ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற முடிந்துள்ளதால், மீண்டும் வழமைபோல் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக, சுவசெரிய சேவை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
Add new comment