கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கிற்குள் நபர் ஒருவர் (hack)ஊடுருவியுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, பல நாட்களாக தனது முகநூல் கணக்கை அணுக முடியாத நிலை காணப்பட்டதாகவும், தனது கணக்கை தாம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும், இன்றையதினமும் (நேற்று) அதனை பயன்படுத்த நபர் ஒருவர் முயற்சித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அந்தக் காலப்பகுதியில் கணக்கின் கட்டுப்பாட்டை கொண்டிருந்த நபர், இட்ட பதிவுகள் தொடர்பில், பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்தவர்களுக்கு தான் அனுதாபம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Add new comment