இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று (21) தனது 200ஆவது டெஸ்ட் போட்டியில் போட்டி நடுவராக கடமையாற்றுகின்றார்.
அந்த வகையில், இன்று (21) காலியில் ஆரம்பமான இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டி நடுவராக கடமைாற்றுகின்றார்.
அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போட்டி நடுவராக 200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது நபர் எனும் சாதனையை அவர் தனதாக்கியுள்ளார்.
மடுகல்லவின் சாதனையைப் பாராட்டும் வகையில், இலங்கை கிரிக்கெட் சார்பில் நினைவுச் சின்னம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச வழங்கிவைத்தார்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) சார்பாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) அஷ்லி டி சில்வா ரஞ்சன் மடுகல்லவிற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.