பெரும்பாலான இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

பெரும்பாலான இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை-Weather Forecast-Rain-Evening-Night

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக, வணிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...