நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகலில் மழை-Weather Sri Lanka-Evening Rain Around the Island

- அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மழை

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வட மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், வட மாகாணங்கள்; புத்தளம் மவாட்டத்திலும், விசேடமாக காலை வேளையில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...