Saturday, June 20, 2020 - 8:55am
கொவிட்-19 தொற்று நோய் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 194 பேர் இன்று (20) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் மும்பாயிலிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அத்தோடு, பிரித்தானியாவில் சிக்கியிருந்த 60 பேர், விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
Add new comment