களனி, வத்தளை, கட்டுநாயக்க பகுதிகளில் நீர் வெட்டு

அவசர திருத்த வேலை காரணமாக இன்று (11) மாலை 4.00 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு சில பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய களனி, பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு களனி, வத்தளை, ஜா-எல, பியகம, மஹர, தொம்பே ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...