அவசர திருத்த வேலை காரணமாக இன்று (11) மாலை 4.00 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு சில பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய களனி, பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு களனி, வத்தளை, ஜா-எல, பியகம, மஹர, தொம்பே ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Add new comment