2ஆவது நபரும் அடையாளம் காணப்பட்டார்

2ஆவது நபரும் அடையாளம் காணப்பட்டார்-2nd Coronavirus Infected Patient Identified

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

44 வயதான குறித்த நபர், இலங்கையில் ஏற்கனவே கொரோனா வைரஸினால் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, 44 வயதான குறித்த நபரும் தற்போது கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டள்ளார்.


Add new comment

Or log in with...