உதயங்க வீரதுங்கவுக்கு மார்ச் 18 வரை வி.மறியல் நீடிப்பு

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, இம்மாதம் 18ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. .

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பெப்ரவரி 14ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மிக் (MiG) விமான கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...