டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு-Fetus Body Found-Waverley Estate-Dayagama

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வெவர்லி தோட்டம் (Waverley Estate) ஆட்லி பிரிவில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு-Fetus Body Found-Waverley Estate-Dayagama

நேற்று (18) மாலை ஆட்லி தோட்டத்தில் வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள புற்தரையில் வீசப்பட்ட நிலையில் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அப்பகுதி வழியாக சென்ற பிரதேசவாசிகள் சிசுவை கண்டு டயகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர்.

டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு-Fetus Body Found-Waverley Estate-Dayagama

சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு-Fetus Body Found-Waverley Estate-Dayagama

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்) 


Add new comment

Or log in with...