Saturday, April 27, 2024
Home » தாய், மகளை படுகொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை

தாய், மகளை படுகொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை

by sachintha
February 20, 2024 6:11 am 0 comment

இரத்தினபுரி, கொட்டகெதன பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி படுகொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி, லங்கா ஜயரத்ன நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இரத்தினபுரி,கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளியான நபருக்கே நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.

கடந்த 2012 ஜூலை 19 இல், இந்தக் இரட்டைப் படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT