Saturday, April 27, 2024
Home » மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு; அமைச்சர் டக்ளஸ்

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு; அமைச்சர் டக்ளஸ்

by Prashahini
January 14, 2024 9:58 pm 0 comment

மன்னார் மீனவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுக்கு விசேட கூட்டம் இன்று (14) மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப்பணிப்பாளர் கலிஸ்ரன் ஒழுங்கமைப்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை செயல்திட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு தொடர்பிலும், மாவட்ட ரீதியாக இடம்பெற்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மீனவர்களால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் கடல் அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகளால் கிராம மட்ட மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பிலும் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளான டைனமோட்,சுருக்குவலை ,பத்தை வைத்தல், உள்ளூர் இழுவை படகு மீன்பிடி, இரவு நேர சுருக்குவலை, டைவிங் என பல்வேறு பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக கடற்படை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்ததுடன் மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களும் கடற்படையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இந்திய மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இந்திய இலுவைபடகுகளை உள்ளூர் மீனவர்கள் இணைந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் அனர்த்தங்களின் போது சூறாவளி,மற்றும் புயலின் போதும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் போது நிவாரணம் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும் இந்திய இழுவை படகு தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்களுடனான விரைவில் கலந்துரையாடலை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT