171
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுதல் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.