111
மன்னார் நானாட்டன் பிரதேச செயலகத்துக்கு புதிய செயலாளராக திருமதி கனகாம்பிகை சிவசம்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது பதவியை நேற்றுமுன்தினம் (01) காலை பொறுப்பேற்றார்.
2017ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நானாட்டான் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்த மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) நியமனம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்தே இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
(தலைமன்னார் விசேட நிருபர்)