தென்னிந்திய தொலைக்காட்சி Zee தமிழ் தொலைக்காட்சி சரிகமபா இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியீட்டிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 வயதுடைய உதயசீலன் கில்மிஷாவுக்கு இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி டி.வெங்கடேஷ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கலாநிதி டி.வெங்கடேஷ்வரனினுடைய அழைப்பின் பேரில் தனது குடும்பத்தினருடன் கில்மிஷா, இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்துக்கு அண்மையில் சென்றிருந்தார். இதன்போதே கில்மிஷாவை அவர் வாழ்த்தியதுடன், கில்மிஷாவின் எதிர்கால முயற்சிகளுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர், தென்னிந்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்றமை இதுவே முதல் தடவையென்பதும் குறிப்பிடத்தக்கது.