Friday, April 26, 2024
Home » ரூ.15 லட்சம் கப்பம் பெற்ற இசைக்கலைஞர் கைது

ரூ.15 லட்சம் கப்பம் பெற்ற இசைக்கலைஞர் கைது

by damith
November 13, 2023 7:50 am 0 comment

பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்க விடம் 15 லட்சம் ரூபா கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில், முக்கிய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நபர் முன்னாள் இசைக்கலைஞரெனவும் தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபரிடமிருந்து 12 கிராம் மற்றும் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து வெல்லம்பிட்டி பகுதியில், தபால் அலுவலகத்துக்கு அருகில் இந்நபர் கைதானார்.42 வயதுடைய,இச்சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் கூறினர்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT