Monday, May 6, 2024
Home » நிதி மோசடி செய்தவர் கைது

நிதி மோசடி செய்தவர் கைது

by Gayan Abeykoon
April 24, 2024 9:22 am 0 comment

ஐரோப்பாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தலங்காவ பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி இச்சந்தேக நபர் நிதி மோசடியில் ஈடுபட்டமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள கடல்கம நகருக்கு வந்தபோது இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT