யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான நிதி உதவியை வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமம் அண்மையில் வழங்கி வைத்துள்ளது.
யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய வளாகத்தில் பனம் விதை நடுகைக்காக 100,000 ரூபாவும் வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை கட்டட பணிக்காக 100,000 ரூபாவும் முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பிலுள்ள 3 குடும்பங்களுக்கு கிணறு கட்டுவதற்காக 250,000 ரூபாவும் யன்னல், கதவுகள் பொருத்துவதற்காக 60,000 ரூபாவும் மின் இணைப்புக்காக 52,000 ரூபாவும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நெடுங்கேணி மகா வித்தியாலயம், வ/ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தின் 83 மாணவர்களினது ஒக்டோபர், நவம்பருக்கான பேருந்து கட்டண செலவை சந்நிதியான் ஆச்சிரமம் ஏற்றுள்ளது.
இதேவேளை, ஆவணி மாத ஞானச்சுடரின் 308ஆவது மலர் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
கரவெட்டி தினகரன நிருபர்