சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம்.எம் நெளஷாட் எழுதிய “சம்மாந்துறை ஸகாத் நிறுவனத்தின் வகிபாகம் – ஓர் ஆய்வு” எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (11) இடம்பெற்றது.
சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்சூறா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நூலில் முதல் பிரதியை முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம் நெளஷாட் பிரதம அதிதியின் கரங்களினால் பெற்றுக் கொண்டார்.
குறித்த நூலில் ஏற்புரையை எம்.எம் நெளஷாட் வழங்கியதுடன் ,இதன் ஆய்வுரையினை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி) வழங்கினார்.
இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் மற்றும் நம்பிக்கையாளர் சபை தலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான ஐ.எம் ஹனிபா,உலமா சபை தலைவர் எம்.எல்.எச் பஷீர் (மதனி) , நம்பிக்கையாளர் சபை செயலாளர் இஸ்ஹாக் (நளீமி), சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறக்கமாம் தினகரன் நிருபர்