Sunday, June 16, 2024
Home » தென்னிலங்கைக் கட்சியொன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது
யாழில் பண மோசடிக் குற்றச்சாட்டு

தென்னிலங்கைக் கட்சியொன்றின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது

by damith
May 13, 2024 6:00 am 0 comment

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார் என மேற்படி நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தென்னிலங்கை பிரதான கட்சி ஒன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எனவும், நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், வேறு நபர்களிடமும் பண மோசடிகளில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT