180
டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் விளக்கம்
தமக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்த கர்ப்பிணித் தாய்மார் தற்போது தம்மிடம் மன்னிப்பு கோரி வருவதாக, டொக்டர் ஷாபி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: சிசேரியன் அறுவை சிகிச்சையின் Caesarean Surgery போது சில தாய்மார்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதாக, என்மீது திட்டமிட்டு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். சில கர்ப்பிணித் தாய்மார்கள் பலவந்தப்படுத்தப்பட்டு இவ்வாறு கருத்துக்கூற திணிக்கப்பட்டனர்.
இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்கூறிய தாய்மார்கள் தற்போது தன்னிடம் மன்னிப்புக் கோரி வருகின்றனர்.