104
தாய்வானின் கிழக்கு பகுதியான ஹுவாலியன் பகுதியில் (Hualien) 6.3 ரிச்டர் அளவுகோலில் பல நிலநடுக்கங்கள் பதிவாகியதாக, தாய்வானின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (21) இரவு நிலநடுக்கங்கள் ஏற்பட ஆரம்பித்து, நேற்று அதிகாலை வரை நீடித்ததாகவும் 80 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவானதாகவும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய்வானின் தலைநகர் தாய்பேயில் இந்த நிலநடுக்கங்களால் சில கட்டடங்கள் குலுங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானில் கடந்த 03ஆம் திகதியும் 7.2 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததுடன், இதில் 14 பேர் உயிரிழந்திருந்தனர்.
6.3 ரிச்டர் அளவுகோலில் பதிவு