Monday, May 6, 2024
Home » பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு

பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு

கைத்துப்பாக்கியுடன் இருவர் பலி

by Gayan Abeykoon
April 24, 2024 7:19 am 0 comment

மொரகஹஹேனை பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த முச்சக்கரவண்டியொன்றின் மீது நேற்று (23) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மீகொட, தெல்கெட்டிய சந்தியில் பொலிஸாரின் வீதித் தடையில் முச்சக்கரவண்டியொன்றை சோதனையிடுவதற்காக வழிமறிக்க முயற்சித்த போது அம்முச்சக்கரவண்டியில் இருந்த நபர்கள், பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு மொரகஹஹேனைக்கு தப்பிச் சென்றதாகவும் இது தொடர்பாக மொரகஹஹேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் விசாரணைக்காக அங்கு வந்த கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் அம்முச்சக்கரவண்டியை வழிமறிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டி உத்தரவை மீறிப் பயணித்ததாகவும் இந்நிலையில் மொரகஹஹேனை – மீப்பே வீதியிலுள்ள டயர் தொழிற்சாலையொன்றுக்கு அருகில் அம்முச்சக்கரவண்டி மீது கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டியில் இருந்த மற்றுமொருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், முச்சக்கரவண்டியிலிருந்து துப்பாக்கியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 42, 35 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT