46
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் பிரதேச செயலாளர் பிரகீத் தனஞ்சூரிய தலைமையில் கந்தப்பளையில் நேற்றுமுன்தினம் இந்நிகழ்வு நடைபெற்றது.