அவுஸ்திரேலியாவின் சிட்னி செரண்டிப் சமூக கலாசார சங்கம் ஒழுங்கு செய்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தின வைபவம் சிட்னியிலுள்ள ‘டார் முதாசிர் யென்னோரா (தப்லீக் ஜமாத் மர்கஸ்)’ இல் அண்மையில் நடைபெற்றது.
இலங்கையின் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் மபாஸ் முப்தி அதிதியாக கலந்து கொண்டு பிரசங்கம் மற்றும் தொழுகையையும் நடத்தினார்,
சிட்னி அமீர் ஹாஜி ரஸ்மி அலவிவியின் ஏற்பாட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிதிகள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
சங்கத்தின் தலைவர் யாசீம் அப்துல் முனாப் (ஹாஜி அனஸ்), உப தலைவர் ஹாஜி ஹசன் பஸ்ரி, செயலாளர் அஷ்கர் மன்சூர், முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் ஒருங்கிணைப்பு செயலாளர் மொஹமட் முஸ்தபா மற்றும் செரண்டிப் சமூக கலாசார சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ருஸைக் பாரூக்