50
புத்தளத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் பெருநாள் தின நிகழ்வுகளில் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஆர்வத்தோடு பங்கு பெற செய்வதற்கான ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பாரம்பரிய போட்டிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் பங்கு பற்றும் வழக்கம் தற்போது அருகி வரும் நிலையிலேயே இத்திட்டம் நடைமுறை படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் இவ்வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளை புத்தளம் நகரிலே உயிர்ப்பிப்பது தொடர்பில் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றதுடன் நிகழ்ச்சி ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் தினகரன் நிருபர்