யாழ்ப்பாணம், புங்குடுதீவு அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்திய சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டதாக, ஆலய நிர்வாகத்தினர்
தெரிவித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் ஆலய முத்தேர் இரதோற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கண்ணகியம்மன், விநாயகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சமேதரராய் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற விசேட அபிஷேகங்களை தொடர்ந்து வசந்த மண்டபத்திலிருந்து எழுந்தருளிய அம்பாள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இங்கு அருள்மிகு கண்ணகி அம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்திய பட்டுச் சேலை ஏலத்தில் விடப்பட்டது. அதனை 16 இலட்சம் ரூபாவுக்கு பக்தர் ஒருவர் வாங்கியதாகவும், ஆலய நிர்வாகத்தினர் மேலும் கூறினர்.