ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் செனன் தோட்டப்பகுதியில் அமைந்திருந்த தேயிலைத் தொழிற்சாலையொன்று திடீர் தீ ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகளின் முயற்சியால் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் செனன் தேயிலைத்தொழிற்சாலையில் இன்று (21) மாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொழிலாளர்கள் ஹட்டன் டிக்கோயா தீயணைப்பு படை மற்றும் பொலிஸார் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
குறித்த தீப்பரவல் அடுப்பில் ஏற்பட்ட அதிக சுவாலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீப்பரவல் காரணமாக தொழிற்சாலைக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்