அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மயக்க மருந்து வைத்திய நிபுணராக கடமையாற்றி மருத்துவ உயர் கற்கை நெறிக்காக வெளிநாடு செல்லும் வைத்தியர் ஜே.பிரசாந்தன் அவர்களின் சேவையை பாராட்டி ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் வெள்ளிக்கிழமை (22) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவரது சேவையினை பாராட்டி, வைத்தியசாலை அத்தியட்சகர் மற்றும் வைத்திய நிபுணர்களினால் நினைவுச்சின்னங்கள், பரிசுகள் மற்றும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வைத்திய விசேட வைத்திய நிபுணர்கள், சிரேஷ்ட வைத்தியர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)