Thursday, May 9, 2024
Home » பேருவளையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

பேருவளையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

- குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை

by Prashahini
March 13, 2024 10:17 am 0 comment

பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (12) 9.00 மணியளவில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருவளை மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பேருவளை பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று முதற்கட்ட பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT