194
பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) 9.00 மணியளவில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருவளை மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பேருவளை பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்திற்கு சென்று முதற்கட்ட பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.