பதுளை ஸ்ரீ தம்மானந்தா மகா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த உள் அணுகல் வீதியை அமைப்பதற்கு, சியபத பினான்ஸ் பிஎல்சி அண்மையில் நிதியுதவியை வழங்கியது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் அதிகாரிகளின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொறுப்புணர்வுமிக்க இந்த முன்முயற்சியின் ஒரு அங்கமாக, நன்கொடையாக காசோலையை பாடசாலை அதிபர் திருமதி வி.ஏ.சி நந்தனியிடம், பதுளை சியபத பினான்ஸ் பிஎல்சி கிளை முகாமையாளர் தினுச ராஜமந்திரி கையளித்தார்.
சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் மஞ்சுள ஜயதிலக்க, பிராந்திய முகாமையாளர் ரெங்கன் பாலகிருஸ்ணன், பதுளை சியபத பினான்ஸ் தங்க நிதியுதவிப் பொறுப்பாளர் கௌசிக குணசேகர மற்றும் பதுளை ஸ்ரீ தம்மானந்தா மகா வித்தியாலயத்தின் உப அதிபர் ஏ.எம். நந்தசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.