Sunday, May 12, 2024
Home » பதுளை ஸ்ரீ தம்மானந்தா வித்தியாலய உள்ளக வீதியை மேம்படுத்த உதவிய சியபத பினான்ஸ்

பதுளை ஸ்ரீ தம்மானந்தா வித்தியாலய உள்ளக வீதியை மேம்படுத்த உதவிய சியபத பினான்ஸ்

by Rizwan Segu Mohideen
March 8, 2024 11:42 am 0 comment

பதுளை ஸ்ரீ தம்மானந்தா மகா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த உள் அணுகல் வீதியை அமைப்பதற்கு, சியபத பினான்ஸ் பிஎல்சி அண்மையில் நிதியுதவியை வழங்கியது.

சியபத பினான்ஸ் பிஎல்சியின் அதிகாரிகளின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொறுப்புணர்வுமிக்க இந்த முன்முயற்சியின் ஒரு அங்கமாக, நன்கொடையாக காசோலையை பாடசாலை அதிபர் திருமதி வி.ஏ.சி நந்தனியிடம், பதுளை சியபத பினான்ஸ் பிஎல்சி கிளை முகாமையாளர் தினுச ராஜமந்திரி கையளித்தார்.

சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் மஞ்சுள ஜயதிலக்க, பிராந்திய முகாமையாளர் ரெங்கன் பாலகிருஸ்ணன், பதுளை சியபத பினான்ஸ் தங்க நிதியுதவிப் பொறுப்பாளர் கௌசிக குணசேகர மற்றும் பதுளை ஸ்ரீ தம்மானந்தா மகா வித்தியாலயத்தின் உப அதிபர் ஏ.எம். நந்தசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT