Thursday, May 9, 2024
Home » நல்லூரில் கட்டடம் ஒன்றுடன் லொறி மோதி விபத்து

நல்லூரில் கட்டடம் ஒன்றுடன் லொறி மோதி விபத்து

by Prashahini
March 7, 2024 12:22 pm 0 comment

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி நிறுவன கட்டடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த நிறுவனம் ஒன்றின் கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் அலுவலகமும் சேதமடைந்துள்ளது.

லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அருகில் இருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT