ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது ஆடவர் ஒருவர் மருத்துவ ஆலோசனையை மீறி 217 தடவைகள் கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அபூர்வமான சம்பவம் தொடர்பில் மருத்துவ சஞ்சிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த ஆடவர் 29 மாத இடைவெளியில் தனிப்பட்ட முறையில் தடுப்பூசியை வாங்கி உடம்பில் செலுத்தியுள்ளார். அந்த ஆடவருக்கு நோய் எதுவும் இல்லை என்று ஏர்லகன் நியுரம்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளிதழ்கள் வாயிலாக அந்த ஆடவர் குறித்த தகவலை அறிந்துகொண்டதாக டொக்டர் கிலியன் ஸ்கோபர் கூறினார். அதன் பின் அந்த ஆடவர் சில பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டார்.
அவரது இரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. அந்த ஆடவர் கொவிட்–19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.