236
‘பாடுகளின் பாதையில்’தவக்கால சிறப்பு தியானமும் திருப்பலியும் கொழும்பு புதுச் செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலய பங்கின் ஏற்பாட்டில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தியாவின் பாளையங்கோட்டை மறை மாவட்டத்திலிருந்து வருகை தந்துள்ள அருட்பணி சகாயராஜ் சுதன் அடிகளாரின் வழிநடத்தலில் இந்த நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரை (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) இந்த தியான நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் அதனையடுத்து எதிர்வரும் மார்ச் 4 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மாலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளன.