அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குள் புதிதாக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டவர்கள், அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெறவுள்ளவர்கள் பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இவ்விருது வழங்கும் நிகழ்வு லொய்ட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் புதிதாக அதிபர்களாக உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளவர்கள், கடந்த காலங்களில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அதிபர் சேவையில் இருந்து விரைவில் ஓய்வு பெறவுள்ள அதிபர்கள் ஆகியோரைக் கெளரவிக்கும் நிகழ்வானது அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஜே.எம்.அன்வர் நெளஷாத் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மேற்படி விருது வழங்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் ஆகியோருடன் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ. கே. அமீர், முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
றிசாத் ஏ. காதர்…
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)