இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியான்டோ வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை (14) நடைபெற்ற தேர்தலில் 72 வயதான முன்னாள் சிறப்புப் படை தளபதி சுபியான்டோ சுமார் 58 வீதமான வாக்குகளை வென்றிருப்பதாக ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அவரின் போட்டியாளர்களான அனீஸ் பெஸ்வடன் மற்றும் கன்ஜர் பிரனோவோ ஆகியோர் முறையே 25 மற்றும் 17 வீத வாக்குகளையே வென்றுள்ளனர்.
இதற்கு முன் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த சுபியான்டோ, சுஹார்டோ ஆட்சிக்காலத்தில் உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டவராவார்.
“இந்த வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றி” என்று தலைநகர் ஜகர்தாவில் ஆதரவாளர்கள் முன் சுபியான்டோ குறிப்பிட்டார்.