முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில், நேற்று (14) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் தனது மகன் மற்றும் மூன்று பேருடன் தண்ணிமுறிப்பு பகுதியில் வயல்வெளியில் குடல் ஒன்றில் தங்கி வனப்பகுதியில் தேன் சேகரித்து வந்துள்ளனர்.
மேலும், நேற்று அதிகாலை தாங்கள் இருந்த குடிலில் நெருப்பு மூட்டிக் கொண்டிருந்த போது, அவர்கள் வைத்திருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கி தீயில் விழுந்து வெடித்ததினால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.