காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலியானது அண்மையில் பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கடந்த நான்கு நாட்கள் மாலை வழிபாடுகள் மக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக மக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனை வழிபாடும் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை டெஸ்மன்ராஜ் அடிகளார் தலைமைதாங்க அருட்பணியாளர் அம்புறோஸ் அடிகளாரும் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
குழந்தை இயேசு திருவுருவ பவனியும் ஆலயத்தைச்சுற்றி எடுத்துவரப்பட்டு இறுதி செபத்துடன் புனித ஆசீரை பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)