Sunday, April 28, 2024
Home » ஜனாதிபதித் தேர்தல்; பொதுக்கூட்டத்தில் முடிவு

ஜனாதிபதித் தேர்தல்; பொதுக்கூட்டத்தில் முடிவு

by mahesh
February 14, 2024 7:45 am 0 comment

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இம்மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போதே, தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கூட்டாக இணைந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியின் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படாததால் கட்சிக்குள் பல குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT